குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 27, 2020

குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை

குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப்-1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 90 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப்-1) மூலமாக தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றனர்.

No comments:

Post a Comment