தனியார் கல்லூரிகள் விண்ணப்பம் விற்கக்கூடாது:கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

தனியார் கல்லூரிகள் விண்ணப்பம் விற்கக்கூடாது:கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

தனியார் கல்லூரிகள் விண்ணப்பம் விற்கக்கூடாது:கல்லூரி கல்வி இயக்ககம்  உத்தரவு
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்து, அந்த திட்டத்தையும் 15ம் தேதி தொடங்கி வைத்தார். 

இதையடுத்து, கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல் பெறப்படும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று காலையில் இருந்தே அச்சிட்ட விண்ணப்பங்களை விற்கத் தொடங்கி விட்டன. 

இதை வாங்குவதற்காக மாணவர்கள் குவிந்தனர். கொரோனா தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டமாக விண்ணப்பங்களை வாங்கினர்.

இது  குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கல்லூரிக் கல்வி இயக்ககம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

 தமிழகத்தில் உள்ள 109 அரசு கல்லூரிகளில் 20ம் தேதி முதல்  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இந்நிலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் அச்சிட்ட விண்ணப்பங்களை தங்கள் விருப்பம் போல விற்பனை மற்றும் வினியோகம் செய்து வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது. 

அதனால், உடனடியாக தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அச்சிட்ட விண்ணப்பங்களை வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.

மேலும், 20ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பங்களை பெற வேண்டும். இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, தனியார் கல்லூரிகள் நேற்று மதியத்துக்குள் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விற்று தீர்த்தன. இந்த உத்தரவு வந்ததும் விண்ணப்ப வினியோகத்தை நிறுத்தி வைத்துள்ளன.

No comments:

Post a Comment