10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடியாது: தமிழக அரசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 25, 2020

10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடியாது: தமிழக அரசு

 10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடியாது: தமிழக அரசு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பத்தாம் வகுப்பு மாணவரின் தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.


அந்த பதில் மனுவில், அக்டோபர்  2வது வாரத்துக்குள் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் இறுதியில் தேர்வு நடக்கிறது. அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.


பள்ளி மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment