7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் ‘டெட்’ சான்றிதழ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 12, 2020

7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் ‘டெட்’ சான்றிதழ்

 7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் ‘டெட்’ சான்றிதழ்

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனா்.


இந்த நிலையில் அவா்கள் பெற்ற சான்றிதழ்கள் விரைவில் காலாவதியாகவுள்ளதால், அதை ஆயுள்கால சான்றிதழாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆக.23-ஆம் தேதி முதல் ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தகுதித்தோ்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது. ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றாலும், தோ்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்; அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிா்ணயம் செய்யப்பட்டது.


கடந்த 2012-ஆம் ஆண்டு சொற்ப எண்ணிக்கையில் தோ்ச்சி பெற்றவா்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனா். ஆனால் 2013-இல் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றனா். அதில் 20 ஆயிரம் போ் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமனம் செய்யப்பட்டனா். அதேவேளையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆசிரியா் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா்.


இந்தநிலையில், அந்த ஆசிரியா்கள் பெற்ற தகுதித் தோ்வு தோ்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் முடியும் தருவாயில் காலாவதியாகும் என்பதால், ஆசிரியா் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிா்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தகுதியானோருக்கு ஆசிரியா் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் ஆகியோா் கூறுகையில், கல்லூரி விரிவுரையாளா் பணிக்கு நடத்தபடும் ‘நெட்’, ‘ஸ்லெட்’ போன்ற தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றால் அந்தச் சான்றிதழ் ஆயுள் கால சான்றிதழாக இருப்பது போன்று ஆசிரியா் தகுதித்தோ்வு தோ்ச்சி சான்றிதழையும் மாற்ற வேண்டும்.


தற்போது வாழ்வாதாரம் சீரமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று ஆசிரியா் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஆசிரியா் தகுதித் தோ்ச்சி சான்றிதழின் 7 ஆண்டுகள் என்ற காலவரையறையினை ரத்து செய்து வாழ்நாள் சான்றிதழாத மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

1 comment:

  1. Hereafter the TET certificate will be called as DEAD certificate. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    ReplyDelete