ஞாயிறு முழு ஊரடங்கு: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 8, 2020

ஞாயிறு முழு ஊரடங்கு: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

 ஞாயிறு முழு ஊரடங்கு: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

அனைத்து ஞாயிறு அன்றும், முழு ஊரடங்கை அமல்படுத்துவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, மனோகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, இந்த மாதத்தில் அனைத்து ஞாயிறன்றும், முழு ஊரடங்கை, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிறன்று முழு ஊரடங்கால், சனிக்கிழமைகளில், அதிக கூட்டம் கூடுகிறது. சமூக இடைவெளி பின்பற்றப்படுவது இல்லை. 

மாநிலங்கள்; மாவட்டங்களுக்கு இடையே, 'இ ~ பாஸ்' இல்லாமல் பயணிக்க, மத்திய அரசு அனுமதிக்கிறது. ஆனால் தமிழக அரசு, குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும், இ ~ பாஸ் பெற்றே பயணிக்க அனுமதிக்கிறது. தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள், மத்திய அரசின்உத்தரவை மீறுவதாக உள்ளன. 

தமிழக அரசின் உத்தரவால், சொந்த ஊரில் இருக்கும் என் பெற்றோரை பார்க்க முடியவில்லை. இ ~ பாஸ் வழங்குவதில், முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே, தமிழகத்துக்குள் பயணிக்க, கட்டுப்பாடுகள் விதித்திருப்பததையும், ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவதையும், ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment