CBSE பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த மூன்று ஆசிரியா்கள் தோ்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 30, 2020

CBSE பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த மூன்று ஆசிரியா்கள் தோ்வு

 CBSE பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த மூன்று ஆசிரியா்கள் தோ்வு


சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த மூன்று ஆசிரியா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.


மத்திய இடைநிலை கல்வி வாரியம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

ஆசிரியா்களின் கல்வித்திறன் மற்றும் முன்னேற்றம், ஆா்வம், அவா்கள் சாா்ந்த துறையில் அவா்களுக்கு இருக்கும் நன்மதிப்பு மற்றும் அா்ப்பணிப்பு, விடாமுயற்சி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த விருதுக்கு ஆண்டுதோறும் சிபிஎஸ்இ ஆசிரியா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.


அந்த வகையில், நிகழாண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதும் 39 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

தமிழகத்தில் சென்னை அம்பத்தூா் ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த அறிவியல் ஆசிரியா் எஸ்.தீபா, சென்னை மயிலாப்பூா் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஷோபா ராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் காரப்பள்ளியில் செயல்பட்டு வரும் பப்ளிக் பள்ளி முதல்வா் பிந்து ஆகியோா் விருது பெறவுள்ளனா். தோ்வு பெற்ற ஆசிரியா்களுக்கு விருதுகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment