நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் வாரத்தில் 6 நாளும் செயல்படும்: செமஸ்டர், கோடை விடுமுறை இல்லை; யுஜிசி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 23, 2020

நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் வாரத்தில் 6 நாளும் செயல்படும்: செமஸ்டர், கோடை விடுமுறை இல்லை; யுஜிசி அறிவிப்பு

 நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் வாரத்தில் 6 நாளும் செயல்படும்: செமஸ்டர், கோடை விடுமுறை இல்லை; யுஜிசி அறிவிப்பு


நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால், 2020-2021 கல்வி ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் விடுமுறை, கோடை விடுமுறை என எந்த விடுமுறையும் கிடையாது என்று மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 


தமிழகத்தில் மார்ச் 25ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் தேர்வுகள் நடத்த முடியவில்லை


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே ஏப்ரல் மாதம் கல்லூரிகள் திறப்பது மற்றும் தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய அரசின் கல்வித்துறை, பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் ஆகியவை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தன. 


இருப்பினும் கொரோனா தொற்று முடிவுக்கு வராததால், மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.


 அதன் அடிப்படையில், தற்போது கல்லூரிகளை திறப்பதற்கான அறிவிப்பை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகள் நவம்பர் மாதமே தொடங்க வேண்டும். 


அதற்கேற்ப, அனைத்து பல்கலைக் கழகங்களும் மாணவர் சேர்க்கையை அக்டோபர் மாதத்துக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்லூரிகளுக்கு பல்வேறு விதிமுறைகளையும் பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.


 நவம்பர் மாதம் கல்லூரிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. புதியதாக சேர்பவர்களுக்கு ஆன்லைன் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும்.


 நவம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அவர்களுக்கான கல்வி ஆண்டு 2021 ஆகஸ்ட் 30 வரை நடக்கும்.



கொரோனா தொற்றுக்காக விடப்பட்ட விடுமுறைகளை சரிகட்டும் வகையில், இந்த கல்விஆண்டில் வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரி வகுப்புகள் நடக்கும்.


அதேபோல அனைத்து பல்கலைக் கழகங்களும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். அவர்களுக்கும் எந்த விடுமுறையும் கிடையாது


அதன் அடிப்படையில், குளிர்கால மற்றும் கோடை கால விடுமுறைகள் ஏதும் விடாமல் தொடர்ந்து பாடங்களை நடத்த வேண்டும்

No comments:

Post a Comment