விடுபட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 7, 2020

விடுபட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க கோரிக்கை

 விடுபட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க கோரிக்கை


தமிழக அரசு 2017-- - 18ம் கல்வி ஆண்டில் பிளஸ் - 2 பயின்ற மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மாநில அரசு 2010- - 11 ஆம் கல்வியாண்டு தொடங்கி தமிழ் வழியில் பயிலும் பிளஸ்- 2 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. 2017 -- 18ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் ஒட்டுமொத்த லேப்-டாப்கள் தேவை குறித்த கணக்கீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கணக்கீட்டின்படி லேப்-டாப்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததால் லேப்-டாப்கள் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.


இந்நிலையில் நீட் தேர்வை கருத்தில் கொண்டு 2019 -- 20 ஆம் ஆண்டில் பயிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.இதனையடுத்து 2018ல் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடர்ந்து லேப்-டாப் வழங்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு வந்தனர்.


 தற்போது கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய லேப்-டாப்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. I am same badge student I have not been offered a laptop yet

    ReplyDelete