7 புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர் நியமனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 9, 2020

7 புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர் நியமனம்

 7 புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர் நியமனம்


ஏழு புதிய கல்லூரிகளுக்கு, பேராசிரியர்கள் உட்பட, 210 பேரை நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழகத்தில், ஏழு புதிய கலை அறிவியல் கல்லூரிகளை துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம்; கரூர் மாவட்டம், தரகம்பட்டி; விழுப்புரம் மாவட்டம், வானுார்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார்; நாகை மாவட்டம், குத்தாலம்; ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் ஆகிய இடங்களில், இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், கோவை, புலியகுளத்தில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


இந்த கல்லூரிகளில், நடப்பாண்டில் மாணவர்களை சேர்த்து, பாடங்கள் நடத்துவதற்காக, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா, 17 உதவி பேராசிரியர்கள் மற்றும், 13 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


 இதற்கான அரசாணையை, தமிழக உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்துள்ளார்

No comments:

Post a Comment