மனிதநேய மைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 25, 2020

மனிதநேய மைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை

 மனிதநேய மைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை


சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், மனிதநேயம் அறக்கட்டளை மையத்தில் படித்த மாணவர்கள், சாதனை படைத்துள்ளனர்.


ஐ.ஏ.எஸ்., ~ ஐ.பி.எஸ்., உட்பட, சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான, காலி பணியிடங்களை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, அதற்கான தேர்வை நடத்தி வருகிறது.


இந்தாண்டிற்கான, முதல்நிலைத் தேர்வு, இம்மாதம், 4ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள், 24ம் தேதி வெளியிடப்பட்டன.


மொத்தம், 796 காலி பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில், 'மனிதநேயம் அறக்கட்டளை' பயிற்சி மையத்தில் படித்த, 22 மாணவர்கள், ஒன்பது மாணவியர் என, 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ ~~ மாணவியர் அனைவரும், முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பிற்காக, www.mntfreeias.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, பயிற்சி மைய நிறுவனரும், சென்னை, மாநகர முன்னாள் மேயருமான, சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.


இந்த மையத்தில் படித்து கடந்த, 14 ஆண்டுகளில், 3,534 மாணவ~ ~ மாணவியர் தேசிய மற்றும் மாநில அளவில், பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment