பிரிட்டனில் நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 15, 2020

பிரிட்டனில் நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு

 பிரிட்டனில் நர்ஸ்களுக்கு  வேலைவாய்ப்பு


பிரிட்டன் நாட்டில் உள்ள, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, ஆண் மற்றும் பெண் செவிலியர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அனுபவம் உள்ள, டிப்ளமா; பி.எஸ்.சி., டிகிரி முடித்த செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.


 இப்பணிக்கு, சர்வதேச ஆங்கில மொழி தேர்வில், பேண்ட் -- 7.0 அல்லது, ஓ.இ.டி., பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுவோருக்கு, 2 லட்சம் ரூபாய் முதல், 2.50 லட்சம் ரூபாய் வரை மாத சம்பளம், இலவச விசா, விமான டிக்கெட் மற்றும் பிரிட்டன் நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்ட, இதர சலுகைகள் வழங்கப்படும்.


சர்வதேச ஆங்கில மொழி தேர்வில், தேர்ச்சி பெற, இலவச பயிற்சி பெற விரும்பும் செவிலியர் களுக்கான, முதல்நிலை தேர்வு, வரும், 29ம் தேதி நடக்க உள்ளது.


 விருப்பம் உள்ளவர்கள், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், பாஸ்போர்ட் நகல், புகைப்படம் ஆகியவற்றை,


 omcluk2020@gmail.com


என்ற, 'இ- - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், 


www.omcmanpower.com 


என்ற, இணையதளத்தை பார்க்கவும். இல்லாவிட்டால், 044 -- 2250 5886, 2250 2267, 95662 39685, 86103 34355 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment