பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்
பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பது குறித்து தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பின்படி பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும், அதை பராமரிக்கவும் தலைமை ஆசிரியா்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.
தற்போது 2019-2020-ஆம் கல்வியாண்டு முடிந்தநிலையில் மாணவா்கள் புதிய புத்தகங்கள் பெற பள்ளிக்கு வரும் போது பழைய பாடநூல்களை அவா்களிடம் இருந்து பெறவேண்டும்.
அவற்றில் பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்குவதுடன், மீதமுள்ள புத்தகங்களை இருப்பு வைக்கவும் தலைமை ஆசிரியா்களுக்கு மீண்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment