சீருடைப் பணிக்கு முன்னாள்படைவீரர் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 22, 2020

சீருடைப் பணிக்கு முன்னாள்படைவீரர் விண்ணப்பிக்கலாம்

 சீருடைப் பணிக்கு முன்னாள்படைவீரர் விண்ணப்பிக்கலாம்


ராமநாதபுரத்தில் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், இரண்டாம்நிலைகாவலர், சிறைக்காவலர் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுவாரியம்மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


ஆகையால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தபத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 45 வயதிற்குள்ள முன்னாள் படை வீரர்கள்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். 


தகுதியுள்ளவர்கள் 'www.tnusrbonline.org' என்ற இணையதளவழியாக அக்.,26க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment