உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி :'அரியர் ஆல் பாஸ்' உத்தரவு வாபஸ் ஆகுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 7, 2020

உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி :'அரியர் ஆல் பாஸ்' உத்தரவு வாபஸ் ஆகுமா?

 உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி :'அரியர் ஆல் பாஸ்' உத்தரவு வாபஸ் ஆகுமா?


தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என, மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்; ஏ.ஐ.சி.டி.இ., விதிகளுக்கு முரணான நிலையை எப்படி எடுக்க முடியும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனால், 'அரியர் ஆல் பாஸ் உத்தரவு' வாபஸ் பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்தி, தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கும், தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, 2020 ஆக., 26ல் பிறப்பிக்கப்பட்டது.


இதை எதிர்த்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், 'பல்கலை கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில், உயர்கல்வித் துறை தலையிட உரிமையில்லை. எனவே, உயர்கல்வித் துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வை நடத்தும்படி, உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. 


இவ்வழக்கில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசு உத்தரவு, ஏ.ஐ.சி.டி.இ., சட்டத்துக்கு எதிரானது. தமிழக அரசின் உத்தரவு, யு.ஜி.சி., வழிமுறைகளின்படி இல்லை' என, கூறப்பட்டுள்ளது. 


இவ்வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, யு.ஜி.சி., தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து, வழக்கில் இணைத்துக் கொள்ள, மாணவர்கள் தரப்பிலும் முறையிடப்பட்டது. 


இதையடுத்து, நீதிபதிகள், 'இந்த விஷயத்தில், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளுக்கு முரணான நிலையை எப்படி எடுக்க முடியும்; வழக்கு தொடரும் மாணவர்கள் வைத்துள்ள அரியர் எண்ணிக்கை, 10ம் வகுப்பு முதல் கல்வி விபரங்கள் கேட்கப்படும்.


 'ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில், பொறியியல் படித்தவர்கள் பணியாற்றும் நிலை உள்ளது. தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என, மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்' என, கேள்வி எழுப்பினர். விசாரணையை, நவ., 20க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment