பள்ளிகளில் D.E.O ஆய்வு
சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள குச்சிக்காடு, கிழப்பட்டு தொடக்கப் பள்ளி, ராவுத்தநல்லுார் நடுநிலைப் பள்ளி, புதுபட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, எமிக்ஸ் பதிவு, மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம், சீருடை, காலணி போன்றவை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, புதுப்பட்டு சக்தி மழலையர் தொடக்கப் பள்ளி, புதுப்பட்டு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment