தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: UGC - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 30, 2020

தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: UGC

 தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: UGC


தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.


இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: 


நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை அக்.31-ம் தேதி வரை மேற்கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 


தொடா்ந்து மாணவா் சோ்க்கை விவரங்களை தொடா்புடைய கல்வி நிறுவனங்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment