வேளாண் முதுகலை கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், டிச., 2 முதல் முதுகலை கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, வரும் டிச.,2 முதல் ஆராய்ச்சிக்கூடங்களை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி) விதிகளின் கீழ் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. அனைத்து வேளாண்மை உறுப்பு கல்லுாரிகளும், பாதுகாப்பான விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,வேளாண் பல்கலையில், டிச., 2 முதல், முதுகலை கல்லூரிகளை திறக்கவும், ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை முதுகலை பாடப்பிரிவு டீன் மற்றும் முதல்வர் கென்னடி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment