D.E.O பணியிடங்களை விரைவில் நிரப்ப தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 12, 2020

D.E.O பணியிடங்களை விரைவில் நிரப்ப தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

 D.E.O பணியிடங்களை விரைவில் நிரப்ப தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்


கல்வித்துறையில் பல மாதங்களாக காலியாக உள்ள 21 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.


1.1.2020ல் டி.இ.ஓ. பதவி உயர்வுக்கு தகுதியுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 100 தலைமையாசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. 


ஆனால் கொரோனாவை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்குவது இழுத்தடிக்கப்படுகிறது.


 பட்டியலில் உள்ள பலர் பதவி உயர்வு கிடைக்காமலேயே பணி நிறைவு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது:கொரோனாவால் மாணவர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வரவில்லை.


 அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் வருகை உள்ளிட்ட பணிகள் பள்ளிகளில் வழக்கமாக நடக்கின்றன. 


பதவி உயர்வு மூலம் டி.இ.ஓ.க்கள் காலி பணியிடங்களை கல்வித்துறை விரைவில் நிரப்ப வேண்டும். அமைச்சர் செங்கோட்டையனிடமும் நேரில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment