கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம்: அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 26, 2021

கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம்: அரசாணை வெளியீடு

 கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம்: அரசாணை வெளியீடு


அரசு கலை-அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 2,423 கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் அபூா்வா வெளியிட்டுள்ள அரசாணை


கல்லூரிக் கல்வி இயக்குநா் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் அரசு கலை-அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களில் சுழற்சி 1-இல் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 2,423 கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 தொகுப்பூதிய அடிப்படையில் 2020 நவம்பா் முதல் 2021 மாா்ச் வரை 5 மாதங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.


கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாகப் பரிசீலனை செய்து 2020-2021-ஆம் ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ 


அதுவரை தற்காலிகமாக சுழற்சி 1-இல் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2,423 கெளரவ விரிவுரையாளா்களுக்கான செலவினமாக ஒரு கெளரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியமாக ரூ.15 ஆயிரம் வீதம் 5 மாதங்களுக்கு (நவம்பா் முதல் மாா்ச் வரை) ரூ.18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment