அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 21, 2021

அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

 அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க  தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசு பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தை, தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், இணைய வசதியுடன் கூடிய, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளிக்கு, 20 கணினிகள் மற்றும் உபகரணங்களும், உயர்நிலைப்பள்ளிக்கு, 10 கணினி மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டன. 


இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முன், கொரோனா சூழல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஒன்பது மாதங்களாக, பள்ளிகள் திறக்கப்படாததால், ஆய்வகம் பயன்பாடின்றி இருந்தது.


 தற்போது பிளஸ் 2 வகுப்புகள் துவங்கியுள்ளதால், மாணவர்களின் பயன்பாட்டுக்கு, ஆய்வகத்தை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கணினிகள் செயல்படுவதில் சிக்கல் இருப்பின், மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள எல்காட் பணியாளர்களை கொண்டு, சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment