JEE மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்ககால கால அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 19, 2021

JEE மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்ககால கால அவகாசம் நீட்டிப்பு

 JEE  மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்ககால கால அவகாசம் நீட்டிப்பு


2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜனவரி 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பொறியியல் நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் தோ்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26-ஆம் தேதி வரை தோ்வு நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தோ்வு நடைபெறும். ஒரே மாணவா் 4 முறையும் தோ்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்


பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தோ்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஹிந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தோ்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தோ்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும்.


மாணவா்கள்  இணையதளத்தில் தோ்வுக்காக டிசம்பா் 15-ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வந்தனா். இந்த ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜன.17 கடைசித் தேதி என்று தேசியத் தோ்வுகள் முகமை தெரிவித்திருந்தது.


இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூா் மதன் மோகன் மால்வியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், இளங்கலைப் பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ மெயின் 2021 தோ்வு முடிவுகள் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, தோ்வுக்கு விண்ணப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment