பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வித் துறை ஆய்வுக்குப் பிறகு தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
அதன்பின்னர், இறுதி முடிவுகளை முதல்வர் எடுப்பார். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலுள்ள தனியார் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலமும், அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்படும் நிலை தொடரும் என்றார்
No comments:
Post a Comment