பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 20, 2021

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

 பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஈரோட்டில்  செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வித் துறை ஆய்வுக்குப் பிறகு தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.


 அதன்பின்னர், இறுதி முடிவுகளை முதல்வர் எடுப்பார். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை


6 முதல் 8-ம் வகுப்பு வரையிலுள்ள தனியார் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலமும், அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்படும் நிலை தொடரும் என்றார்

No comments:

Post a Comment