ஏப்ரல் 15க்குள் பாடங்களை முடிக்க உத்தரவு
பொது தேர்வை சந்திக்க உள்ள மாணவர்களுக்கு பாடங்களை ஏப்ரல் 15க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் காணொலி வாயிலாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்நடந்தது. 38 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது நடப்பு கல்வி ஆண்டின் பொதுத்தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்வை எதிர்கொள்ளும் விதத்தில் பாடதிட்டம் முடிக்கப்பட்டு உள்ளதா, அதில் உள்ள பிரச்னைகள், மாணவர்கள், ஆசிரியர்களின் மன நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கான பாடத்தை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த பிறகு 10, 11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியாகும் என்றும் முதன்மை செயலர் கூறியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment