ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாகப் பணி: செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 21, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாகப் பணி: செங்கோட்டையன்

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாகப் பணி: செங்கோட்டையன்


5 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தாண்டு தேர்வுகள் நடைபெறுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நல்வாழ்வுத்துறை ஆலோசனை கூறிய பிறகு தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார் எனக் கூறினார்.


முதல்வர் ஆட்சிக் காலம் பொற்காலம் என்றும், 5 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தாண்டு தேர்வுகள் நடைபெறுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.


மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாக பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment