ஆசிரியர்கள் கலந்தாய்வு: எதிராக வழக்கு
தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் குணசேகரன் கூறியதாவது:தொடக்க, நடுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 27, 28 ல் நடக்கவிருப்பதாக அரசு அறிவித்திருந்தது.
பணியில் மூத்த தலைமை ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடத்த செயல்முறைகள் வெளியிட்டு உத்தரவு பிறப்பித்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சென்னை உயர்நீதி மன்றமதுரைகிளையில் வழக்கு தொடரப்பட்டது.
பாதிப்பு விபரங்களை ஏற்று கொண்ட நீதிமன்றம் இயக்குநர் உத்தரவிற்கு தடையாணை வழங்கி உத்தரவிட்டது. வரும் செவ்வாய்கிழமை வரை எந்தவிதமான பதவி உயர்வுகளும் வழங்க கூடாதென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment