9, 10, 11-ம் வகுப்புகளுக்காக கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிகரிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 29, 2021

9, 10, 11-ம் வகுப்புகளுக்காக கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிகரிக்க உத்தரவு

 9, 10, 11-ம் வகுப்புகளுக்காக கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிகரிக்க உத்தரவு


கல்வித் தொலைக்காட்சியில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கான பாடங்களை அதிகரிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் கரோனா பரவல்தணிந்ததால் 10, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி 19-ம் தேதியும், 9, 11-ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8-ம் தேதியும் பள்ளிகள்திறக்கப்பட்டு, நேரடி முறையில்வகுப்புகள் தொடங்கப்பட்டன.


இதற்கிடையே 9, 10, 11-ம்வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்வதாக அரசு அறிவித்தது. ஆனாலும், அவர்களுக்கு தொடர்ந்து வகுப்புநடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், மீண்டும் கரோனா பரவல் அதிகரிப்பதால், 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் பொதுத் தேர்வு நடக்க உள்ளதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்களை தொடர்ந்து நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது. 'அரசுப் பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள பாடங்களை கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தவேண்டும். அதற்கேற்ப, அவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பை தொலைக்காட்சியில் அதிகரிக்க வேண்டும்' என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. First online class. Next nobody studies the books. Then free pass. Is this a education? Education is kuttichevru

    ReplyDelete
  2. First online class. Next nobody studies the books. Then free pass. Is this a education? Education is kuttichevru

    ReplyDelete