உதவியாளர் வேலை இன்று கடைசி நாள்:தேதியை நீட்டிக்க கோரிக்கை
மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, இன்றுடன் அவகாசம் முடிகிறது.
தமிழக மின் வாரியம், கள பணிகளை மேற்கொள்ள, கள உதவியாளர் என்ற பதவியில், 2,900 பேரை நியமிக்க உள்ளது.
இதற்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி, பிப்., 15ல் துவங்கியது. இதற்கான அவகாசம், இன்று முடிகிறது. தேர்வுக்கு குறைந்த நபர்களே விண்ணப்பித்து இருப்பதால், கடைசி தேதியை நீட்டிக்குமாறு, பலரும், மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment