போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 20, 2021

போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

 போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா?


:கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, போராட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. 


அரசு பணிகளுக்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சில தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் பங்கேற்கும்படி, பொது மக்களுக்கும் கட்டாய அழைப்பு விடுக்கின்றனர். அவசியம் இன்றி கூட்டம் சேருவதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


மேலும், தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே, அரசு முன்னுரிமை அளிக்க முடியும். சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடக்கிறது. தொடர்ந்து, புதிய அரசு பொறுப்பேற்கும். அதன் பின், போராட்டக்காரர்களின் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வு காண, நடவடிக்கை எடுக்க முடியும். 


எனவே, கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்கும் விதமாக, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் நடத்தும் போராட்டங்களுக்கு, தடை விதிக்க வேண்டும். மீறி போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment