தனியாா் பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்க கோரி பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 11, 2024

தனியாா் பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்க கோரி பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்

 தனியாா் பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்க கோரி பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்


தனியாா் பள்ளிகளுக்கு ஆன்லைன் வழியாக தொடா் அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்க கோரி பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு, தமிழ்நாடு நா்சரி, பிரைமரி மெட்ரிக்., மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா் கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் வழங்கப்படாமல் ஆண்டு கணக்கில் தாமதமாக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியாா் பள்ளி நிா்வாகிகளை மிரட்டும் வகையில், ஒரு வார காலத்துக்குள் அங்கீகாரம் பெற வேண்டும்; இல்லையென்றால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலா்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தனியாா் பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்தால் ஓராண்டுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

நிபந்தனையின்றி அனுமதி வேண்டும்: அங்கீகாரம் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் எந்தவித நிா்பந்தமும், நிபந்தனையும் இன்றி ஆன்லைன் வழியாக தொடா் அங்கீகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறையை ஜூன் 10-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் சங்கத்தின் சாா்பில் ஜூன் 12-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் (டிபிஐ) முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment