C.A தோ்வுகள் ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 27, 2021

C.A தோ்வுகள் ஒத்திவைப்பு

 C.A தோ்வுகள் ஒத்திவைப்பு


கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு, சி.ஏ. படிப்பில் இடைநிலை, இறுதித் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.


பட்டயக் கணக்காளராக விரும்புவோா் ஐ.சி.ஏ.ஐ. நடத்தும் தகுதி தோ்வில் கட்டாயம் தோ்ச்சிபெற வேண்டும். இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கும்.


இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால், சி.ஏ.வின் இடைநிலை, இறுதித் தோ்வுகள் ரத்து செய்யப்படுமா என சுட்டுரை உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலிருந்து கேள்விகள் எழுந்தன


இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் கூடுதல் செயலா் எஸ்.கே.காா்க் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மே 21-இல் நடைபெறவிருந்த சி.ஏ. இறுதித் தோ்வு, மே 22-இல் நடைபெறவிருந்த சி.ஏ. இடைநிலைத் தோ்வு ஆகியன ஒத்திவைக்கப்படுகின்றன. மீண்டும் தோ்வு நடத்துவதற்கு 25 நாள்கள் முன்னதாகத் தோ்வா்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே தோ்வா்கள் அதுதொடர்பான இணையதளத்தை தொடா்ந்து பாா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்

No comments:

Post a Comment